செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரூ.15 லட்சத்திற்கு விற்ற ஹன்சிகா வரைந்த ஓவியம்…!

ரூ.15 லட்சத்திற்கு விற்ற ஹன்சிகா வரைந்த ஓவியம்…!

ரூ.15 லட்சத்திற்கு விற்ற ஹன்சிகா வரைந்த ஓவியம்…! post thumbnail image
நடிகை ஹன்சிகாவுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம். சிறு வயதில் இருந்தே நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஓய்வு நேரங்களிலும் ஓவியங்கள் வரைகிறார்.

இதுவரை தான் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் வைத்து கண்காட்சி நடந்த திட்டமிட்டு உள்ளார். கண்காட்சியில் ஓவியங்களை விற்று ஏழை குழந்தைகள் கல்விக்காக நிதி திரட்டவும் முடிவு செய்து உள்ளார்.

ஏற்கனவே ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இக்குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உணவு, தங்குமிடத்துக்கான செலவுகளை அவரை ஏற்றுள்ளார். வருகிற 9–ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் 5 குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே ‘ஹன்சிகா குழந்தைகள் நல அறக்கட்டளை’ என்ற அமைப்பை துவங்கியுள்ளார். கண்காட்சி நடத்துவதற்கு முன்பாகவே ஹன்சிகா வரைந்த ராதாகிருஷ்ணா ஓவியம் ரூ.15 லட்சத்துக்கு விலை போய் உள்ளது.

ஹன்சினா வீட்டில் இருந்த இந்த ஓவியத்தை பார்த்த நண்பர் ஒருவர் உடனடியாக ரூ.15 லட்சத்தை கொடுத்து ஓவியத்தை வாங்கிவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி