இந்நிலையில் சமீப காலமாக தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம்.தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே சமயம் தமிழில் விஷாலுடன் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அதோடு நான்கைந்து ஹிந்திப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடிக்க ஒப்பந்தமானதும், அவர் தெலுங்குத் திரையுலகை கண்டு கொள்ளவில்லை என அங்குள்ளவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். ஆனாலும், ஸ்ருதிஹாசன் தமிழ்த் திரையுலகிலும் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளார் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி