செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் குழந்தைக்காக தாய்லாந்து செல்லும் சீனர்கள்!…

குழந்தைக்காக தாய்லாந்து செல்லும் சீனர்கள்!…

குழந்தைக்காக தாய்லாந்து செல்லும் சீனர்கள்!… post thumbnail image
தாய்லாந்து:-கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தேர்வு செய்யும் சிகிச்சை முறை, தாய்லாந்தில் பிரபலமாக நடந்து வருகிறது. இங்குள்ள செயற்கை கருவூட்டல் மையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த ஏராளமான தம்பதியினர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து அங்கு சிகிச்சைக்காக சென்றுள்ள ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், சீன பாரம்பரிய முறைப்படி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பம் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் பெண் குழந்தையை வெறுக்கவில்லை, என்றாலும் அனைத்து குடும்பத்தினரும் ஆண் குழந்தையை விரும்புவோம் என்றார்.26 வயதான அந்த பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2–வது ஆண் குழந்தைக்காக இந்த தம்பதியர் தாய்லாந்து கருவூட்டல் மையத்தில், 9 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) பணம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி