செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!…

மீண்டும் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமி!… post thumbnail image
சென்னை:-8 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி ஆனவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு தனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அவரைத் தேடிச்சென்றது எல்லாமே சாதாரணமான வேடங்கள்.அதனால் எந்த படத்திலும் கமிட்டாகாத அரவிந்த் சாமி, மலையாளத்தில் ப்ருதிவிராஜ் போலீஸ் வேடத்தில் நடித்த ஒரு படத்தில் தானும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

ஏற்கனவே அரவிந்த்சாமியின் தீவிரமான ரசிகரான பிருதிவிராஜ். அவருடன் ஒரு படத்திலாவது தான் நடிக்க வேண்டும என்ற தனது ஆசையை அதன் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.
அதையடுத்து, அஜீத்தின் 55வது படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக செய்தி பரவியது. ஆனால், தான் எந்த படத்திலும் வில்லனாக நடிக்கவில்லை. அப்படி நடிப்பதில் தனக்கு விருப்பமும் இல்லை என்று அறிவித்தார் அரவிந்த்சாமி. அதனால் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதில் புதிராக இருந்து வந்தது.

இப்போது தமிழ், இந்தியில் மகேஷ்மஞ்ரேக்கர் என்பவர் இயக்கும் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இப்படம் காக்ஸ்பிரஸ் என்ற மராத்தி படத்தின் ரீமேக்காம். கதைப்படி அவர் ஒரு பிராமணர் வேடத்தில் நடிக்க, டிஷா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீசர் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தனது ஆயிரமாவது படமாக பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு இசையமைக்கும் இளையராஜாவிற்கு இப்படம் 1001வது படமாகும். அவரது இசையில் உருவான ஒரு பாடலையும் யு டியுப்பில் வெளியிட்டு பரபரப்பு கூட்டியுள்ளனர். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி