செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!

விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!

விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…! post thumbnail image
நடிகை திரிஷா இன்று காலை 8 மணிக்கு ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பேன்ட், சட்டை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தார். விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதியில் இருக்கை ஒன்றில் அவர் உட்கார்ந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரருக்கு திரிஷா மேல் சந்தேகம் ஏற்பட்டது.

சிறிது நேரம் உற்று பார்த்தார். பிறகு அருகில் சென்று நீங்கள் யார்? எங்கே போகிறீர்கள் என்று விசாரித்தார். அடையாள அட்டையை காட்டும் படியும் வற்புறுத்தினார். சக பயணிகள் திரிஷாவை அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டனர். பிறகு தன் அடையாள அட்டை போலீஸ்காரிடம் திரிஷா காட்டினார். அதன் பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘என்னிடம் அடையாள அட்டை கேட்டது தவறல்ல. அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் கவனமுடன் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி