அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!… post thumbnail image
காரைக்குடி:-பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எச்.ராஜா. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தற்போது எச்.ராஜா சென்னையில் உள்ளார்.இந்நிலையில் நேற்று மாலையில் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு கடிதம் ஒன்று வந்தது.

அதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ரவீந்திரன் பிரித்து படித்தார். அதில் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார்.அதில், எச்.ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறோம். விரைவில் அவரை கொலை செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரர் ரவீந்திரன் புகார் செய்துள்ளார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? எந்த ஊரில் இருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி