செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நட்புக்காக நடிகரான ஆர்யா!…

நட்புக்காக நடிகரான ஆர்யா!…

நட்புக்காக நடிகரான ஆர்யா!… post thumbnail image
சென்னை:-தற்போது அதிக படங்களில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் ஆர்யா தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு வரை நட்புறவு இருந்ததே இல்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் நடிகர்களுக்குள் ஆத்மார்த்தமான நல்ல நட்பு ஏற்பட்டது.

ஜீவா, ஜெயம் ரவி, விஷால், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ் உட்பட பலர் இவரது நட்பு வட்டத்தில் இருக்கும் முக்கியமானவர்கள். இந்த நட்பின் அடிப்படையிலேயே சக நடிகர்களின் படங்களில் கௌரவ வேடங்களில் நடிக்கிறார் ஆர்யா. ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி, உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் ஏற்கனவே கௌரவ வேடத்தில் நடித்த ஆர்யா, இப்போது, ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்திலும் நட்புக்காக நடிக்கிறார்.

பார்த்திபன் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா, சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் ஜீவா படத்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டுகிற கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கண்ட படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. இப்படங்களைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் பூஜை படத்திலும் ஆர்யா தலைகாட்ட இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி