செய்திகள் செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…

செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!…

செல்போனில் இறந்து போன பாட்டி பேயாக தோன்றினார்!… post thumbnail image
ருமேனியா:-ருமேனியாவை சேர்ந்தவர் ஜினா மிஹை (வயது34). ஜினா மிஹை யின் பாட்டி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.இதற்காக ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்கர்டிஸ்டியில் உள்ள தேவாலயத்தில் ஜினா சார்பாக பிரார்த்தனை நடத்தபட்டது.

அபோது ஜினாவின் பாட்டி அவரது மொபைல் போனில் தோன்றி உள்ளார்.ஆனால் அவரது உருவம் மிகவும் வித்தியாசமாக இருந்து உள்ளது.இது குறித்து ஜினா கூறியதாவது:- நான் எனது மொபைல் போனை ஆப் செய்து வைத்து இருந்தேன் அப்போது அந்த போனில் எனது பாட்டியின் முகம் தெரிந்தது அதை மற்றொரு செல்போன் மூலமாக படம் பிடித்ததாக கூறினார். அவரது கழுத்தில் பாம்பு போன்ற ஒரு உருவம் தெரிந்தது.முழுபடமும் ஒரு துளைவழியாக எடுத்து இருந்தது போல் இருந்தது.அந்த படத்தை பார்க்கும் போது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளது போல் தோன்றுகிறது.

குறி சொல்பவர் உனது பாட்டி ஏதோ ஒரு செய்தியை என்னிடம் கூற விரும்புவதாக கூறினார். அவர் கழுத்தில் பாம்பு வடிவத்தை பார்த்ததும் சில பாவங்களுக்காக அங்குள்ள வாழ்க்கையில் தரப்பட்ட தண்டனையின் சின்னமாக இருக்கலாம் என கூறினார்.
அவரது கல்லறையில் உணவு வைக்காதது பாட்டி குற்றமாக கருதுவதாக ஜினா நம்பினார். ரோமானியாவில் இறந்தவர்களுக்காக உணவுபடைத்து பிச்சைக்காரர்களுக்கு வழங்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கபட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி