செய்திகள்,திரையுலகம் டெக்னீஷியன்களை மிரட்டும் நடிகை வனிதா விஜயகுமார்!…

டெக்னீஷியன்களை மிரட்டும் நடிகை வனிதா விஜயகுமார்!…

டெக்னீஷியன்களை மிரட்டும் நடிகை வனிதா விஜயகுமார்!… post thumbnail image
சென்னை:-சந்திரலேகா, மாணிக்கம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். அதையடுத்து படவாய்ப்புகள் இல்லாததால் டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில மாதங்களாக போலீஸ ஸ்டேசன், கோர்ட்டு என்று பெருங்க களோபரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் ஒருவழியாக சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு, இப்போது நடன இயக்குனர் ரிச்சர்ட் என்பவருடன் இணைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ரிச்சர்ட்டே இயக்குகிறார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து மாலை வீட்டிற்கு கிளம்பும் தொழிலாளர்கள் சம்பளம் கேட்டால், மொத்தமாக தருகிறோம் அல்லது காசு வந்ததும் தருகிறோம் என்று பதில் சொல்லாமல், வரும்போது வரும் என்று மிரட்டலாக பதில் சொல்கிறாராம் வனிதா.

இதனால் வேலை செஞ்சதுக்கான பணம் வருமா? வராதா? என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள், அவர்களின் மிரட்டலைப்பார்த்து, படத்திற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற ஹீரோக்களின் பெயரை வைத்துவிட்டு, நம்பியார், அசோகன், பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன்களை மாதிரி மிரட்டுகிறார்களே என்று அதிர்ச்சியில் காணப்படுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி