செய்திகள்,திரையுலகம் அப்பாவுடன் நடிக்க ஆசைப்படும் ராம்சரண்!…

அப்பாவுடன் நடிக்க ஆசைப்படும் ராம்சரண்!…

அப்பாவுடன் நடிக்க ஆசைப்படும் ராம்சரண்!… post thumbnail image
ஐதராபாத்:-அரசியல் தோல்விக்குப் பிறகு அடுத்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிரஞ்சீவி. விரைவில் அவர் நடிக்க உள்ள 150வது படம் தயாராக உள்ளது. இயக்குனர் யார் ? மற்ற நடிகர்கள் யார் ? என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம்தான் உள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்பா நடிக்கும் படத்தில் தானும் நடிக்க ஆசைப்படுகிறேன் என அவரது மகண் ராம் சரண் தெரிவித்துள்ளார்.

அப்பாவின் 150வது படத்தில் நான் நடிக்கப் போகிறேன். எனக்கான எந்த கேரக்டரும் படத்தில் இல்லையென்றாலும் இயக்குனரிடம் சொல்லி, ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்வேன். இப்படத்தை எங்களது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்னுடைய அம்மா தயாரிக்க உள்ளார். அனைத்தும் சரியாக நடந்தால் அப்பாவின் பிறந்த நாளன்று முறைப்படியான அறிவிப்பை வெளியிட உள்ளோம். படத்தைப் பற்றிய பல வதந்திகள் வெளியாகி வருகின்றன. யாராவது நல்ல கதையுடன் வந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் செய்திகள் வந்தன. அப்படி நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். ஒரு கோடியெல்லாம் ஒரு விஷயமே அல்ல என்கிறார் ராம் சரண் தேஜா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி