செய்திகள்,திரையுலகம் நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!… post thumbnail image
சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி. அதையடுத்து சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் நடனமாட வந்தார்.

ஆனால், களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றி புராணம் படத்தில் எக்காரணம் கொண்டும் நடித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், களஞ்சியமோ, என் படத்தில் நடித்து தராமல் எந்த தமிழ் படத்திலும் நடிக்க விடமாட்டேன் என்று அஞ்சலிக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வந்தார்.இந்நிலையில், சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்கப்போகிற செய்தி அறிந்து கொதித்து விட்டார் மு.களஞ்சியம். உடனடியாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் சங்கங்களுக்கு கடிதம் எழுதினார். அதில் என் படத்தில் நடித்த பிறகுதான் அஞ்சலியை வேறு படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதையடுத்து, இயக்குனர் சங்கம் சார்பில் அஞ்சலிக்கு தடை போடலாமா என்று விவாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலி, மு.களஞ்சியத்தை மீறி தமிழில நடிப்பது கடினம் என்றுதான் கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஜெயம்ரவிக்கு ஜோடியாக சுராஜ் இயக்கத்தில் அஞ்சலி நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் அத்தனை சங்கங்களும் மு.களஞ்சியத்தை கைவிட்டது போலாகி விட்டது. இந்த நிலையில் அஞ்சலியோ, யாருக்கும், எதற்கும் நான் பயப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, அதனால் களஞ்சியம் பிரச்னை பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.ஆக, அஞ்சலி விவகாரத்தில் இயக்குனர் சங்கம் ஜகா வாங்கி விட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி