செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…

நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…

நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக காரைக்குடி சென்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

அவர் தமிழில் இதற்கு முன் நடித்த படங்களான ‘7ஆம் அறிவு, 3” ஆகிய இரண்டு படங்களுமே சிட்டி சப்ஜெக்ட்தான் என்பதால் அவற்றின் படப்பிடிப்பு முழுதும் சென்னையிலேயே நடைபெற்றது.இப்போதுதான் முதன் முறையாக காரைக்குடி பகுதிக்கு அவர் சென்றுள்ளதால் அந்தப் பகுதி அவரை மிகவும் கவர்ந்துவிட்டதாம். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் காரைக்குடியை முழுமையாக விரும்புகிறேன். செம சாப்பாடு…ஐயோ…அப்படியே சாப்பிட முடிவதில்லை என புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரி அவருடைய படங்களின் பெரும் பகுதியை எப்போதும் காரைக்குடியிலேயே எடுப்பது வழக்கம்.

திருநெல்வேலி, கோயம்புத்தூரில் கதை நடந்தால் கூட அதையும் காரைக்குடியிலேயே செட் போட்டு எடுப்பார். அதற்கு உதாரணம்தான் ‘சாமி, அருள்’ ஆகிய படங்கள். இப்போதெல்லாம் சென்னைக்கு அடுத்து அதிகமான படப்பிடிப்பு நடைபெறுவதே காரைக்குடியில்தான் என்றாகி விட்டது. அருமையான அந்தக் கால காரைக்குடியின் பாரம்பரிய வீடுகள், இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி