அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஐ.ஐ.டி…!

பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஐ.ஐ.டி…!

பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஐ.ஐ.டி…! post thumbnail image
பனாஜி :- இந்தியாவின் கல்வித்துறையில் முன்னணியில் செயல்பட்டுவரும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) இயக்குனர்கள் அனைவரும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணியுடன் நேற்று கோவா மாநிலத்தின் டோனா பாலாவில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் அருகில் அமைந்துள்ள பிற பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மூடிய கதவுகளுக்குள் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் சாராம்சம் குறித்து வெளியில் தெரிவிக்கப்படவில்லை.

ஐஐடியின் முன்னாள் மாணவரான கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் சில மணி நேரம் கூட்டத்தில் கலந்துகொண்டபின்னர் அவர்களுடன் மதிய உணவையும் உட்கொண்டார். அங்கிருந்து கிளம்பும் முன்னர் தொழில் நுட்பக் கல்வியின் முக்கிய மையங்களாக இருக்கும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அருகில் உள்ள பிற பொறியியல் கல்லூரிகளுடன் தங்களுடைய அறிவாற்றலைப் பகிர்ந்துகொண்டு வழிகாட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த ஆலோசனையை செயல்படுத்துவதற்காகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டுத் தரத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை மேம்படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தன. மேலும் ஐஐடி இயக்குனர்கள் தங்களின் நிறுவனங்களை மேம்படுத்தவும், சிறப்பு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் மேம்பட்ட நிதி உதவியை கோரினர். மற்றும் ஐஐடி கல்வி மதிப்பீடு, ஆய்வுத் தரவரிசையை மேம்படுத்துவதற்கான வழிமுறை போன்றவற்றையும் அவர்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி