செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க முடிவு…!

சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க முடிவு…!

சூர்யா மற்றும் ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க முடிவு…! post thumbnail image
டைரக்டர் பாண்டிராஜ் குழந்தைகள் படமொன்றை அடுத்து டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே பசங்க என்ற குழந்தைகள் படத்தை எடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தேசிய விருதையும் வென்றது.

தற்போது சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்குகிறார். இந்த படம் முடிந்ததும் குழந்தைகள் பட வேலைகளை துவங்குகிறார். இந்த குழந்தைகள் படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஜோதிகாவை இதில் நடிக்கும் படி அழைப்பு விடுப்பேன் என்றும் கூறினார்.

இதையடுத்து ஜோதிகாவிடம் கதை சொல்வதற்காக பாண்டிராஜ் அணுகினார். அந்த கதையை அவரது கணவரும் நடிகருமான சூர்யா முதலில் கேட்டார். அவருக்கு பிடித்து போனது. அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறி விட்டாராம். அத்துடன் சிறிய வேடத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். ஜோதிகா நடிப்பது பற்றி தகவல் இல்லை. ஆனாலும் இருவரும் இணைந்து இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

திருமணத்துக்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதை அமைந்தால் ஜோதிகா மீண்டும் நடிப்பார் என்று சூர்யா கூறி இருந்தார். எனவே இந்த குழந்தைகள் படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி நடிகர் சத்யனும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி