செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…

நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…

நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!… post thumbnail image
சென்னை:-நடிகை ஹன்சிகா தமிழிலில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.தற்போது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடித்து வருகிறார்.படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டு இருந்த அவர் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இருக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அப்போது பாதுகாவலர்கள் யாரும் உடன் வரவில்லை. தனியாக இருந்தார்.

தியேட்டரை நோக்கி நடந்த சென்று கொண்டிருந்த அவரை அங்கு கூடி நின்ற ரசிகர்கள் அடையாளம் கண்டனர். உடனடியாக ஓடிப் போய் அவரை சுற்றி முற்றுகையிட்டனர். சிலர் ஆட்டோ கிராப் கேட்டார்கள். இன்னும் சிலர் சேர்ந்து நின்று மொபைலில் போட்டோ எடுத்தனர்.ரசிகர்கள் நெருக்கியடித்ததால் அவர்கள் நடுவில் ஹன்சிகா சிக்கினார். வெளியே வர முடியவில்லை. அப்போது சிலர் ஹன்சிகா கையை பிடித்து இழுத்தனர். உடம்பையும் தொட்டு பார்த்தனர். ரசிகர்கள் பிடியில் சிக்கி தவித்தார்.

நிலைமையை உணர்ந்த தியேட்டர் ஊழியர்கள் விரைந்து வந்தனர். ரசிகர்களை தள்ளி விட்டு ஹன்சிகாவை மீட்டார்கள். அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இது குறித்து ஹன்சிகாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, ரசிகர்கள் கூட்டத்தில் நான் சிக்கியது உண்மைதான். எந்த பாதுகாப்பும் இல்லாமல் படம் பார்க்க போனதால் ரசிகர்கள் என்னை சுற்றி முற்றுகையிட்டனர்.தமிழில் பேசி அவர்களை சமாளித்தேன். இந்த சம்பவத்துக்காக நான் அதிர்ச்சியடையவில்லை. அவர்கள் பாணியில் வெளிப்படுத்துகிறார்கள் என்று அதை எடுத்துக் கொண்டேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி