செய்திகள்,முதன்மை செய்திகள் இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…

இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!…

இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் 144 தடை!… post thumbnail image
தர்மபுரி:-இளவரசன் – திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி நத்தம் காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இளவரசன் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் மற்றும் அமைதி கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனிடையே, தர்மபுரி தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி