செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி… post thumbnail image

புதுடெல்லி :

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் மற்றும் 12 பேர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆகஸ்டு மாதத்துக்குள் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

முட்கல் விசாரணை கமிட்டியில் முன்னாள் கேப்டன் கங்குலி இணைந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கங்குலி நேற்று டெல்லியில் நடந்த விசாரணை கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி