செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு வங்காளதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரபுல் 8 ஆண்டு விளையாட தடை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரபுல் 8 ஆண்டு விளையாட தடை!…

வங்காளதேச கிரிக்கெட் வீரர் அஷ்ரபுல் 8 ஆண்டு விளையாட தடை!… post thumbnail image
டாக்கா:-வங்காளதேசத்தில் ஐ.பி.எல். பாணியில் பி.பி.எல். (வங்காளதேச பிரிமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த ஆண்டு நடந்த போது, சூதாட்ட புயல் வெடித்தது. சில முன்னணி வீரர்கள் ‘மேட்ச் பிக்சிங்’சில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர்களில் வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல்லும் ஒருவர். வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.இந்நிலையில் அவர் மீதான தண்டனை விவரத்தை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

அவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தீர்ப்பாயத்தின் தலைவர் காதிமுல் இஸ்லாம் தெரிவித்தார்.வங்காளதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த 29 வயதான அஷ்ரபுல் 61 டெஸ்ட் மற்றும் 177 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி