செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!…

நடிகர் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!…

நடிகர் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது, தினம் தினம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர். இதனால், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திய கெளதம்மேனன் பின்னர், ரசிகர் நடமாட்டம் இல்லாத பகுதிகளாகப்பார்த்து படமாக்கினார்.

தற்போது அஜீத்துடன் மலேசியா பறந்துள்ளது கெளதம்மேனன் யூனிட், அங்குதான் அஜீத்-அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்படுகிறதாம். தனது படங்களில் எப்போதுமே ரொமான்ஸ் காட்சிகளை அதிகமாக இடம்பெறச்செய்யும் கெளதம், இந்த படத்திலும் சற்று தூக்கலாகவே காட்சிகளை வைத்திருக்கிறாராம். அந்த வகையில், இதுவரை அஜீத் நடித்த படங்களில் இந்த படத்தில் ஆக்சன் மட்டுமின்றி ரொமான்சும் ஜாஸ்தியாக இருக்குமாம்.

மேலும், அஜீத், படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், மலேசியாவில் வாழும் தமிழ் ரசிகர்கள் அஜீத்தை சந்தித்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்களாம். அதுமட்டுமின்றி, மலேசியா பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் அஜீத் யூனிட்டை நேரில் சென்று வரவேற்றார்களாம்.மகிழ்ச்சியுடன் மலேசியாவில் முகாமிட்டுள்ளார் அஜீத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி