அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!…

சமையல் எரிவாயு விலை உயராது என மத்திய அரசு உறுதி!… post thumbnail image
பாட்னா:-சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.இதுதொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நுகர்வோருக்கு சமையல் எரிவாயு இப்போது கிடைக்கும் விலையில் தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றப்படமாட்டாது. மக்கள் பெற்று வரும் மானியம் மற்றும் சிலிண்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பெட்ரோல் விலை மார்க்கெட் விலையுடன் இணைக்கப்பட்டதால் 2006ல் இருந்து கட்டுக்குள் இல்லை. மானியங்களால் டீசல் விலை கட்டுக்குள் இருக்கிறது.
விவசாயிகளோ, ஏழை மக்களோ, அரசோ பாதிப்படையாத வகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி