செய்திகள்,திரையுலகம் 2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

2 குழந்தைகள் தந்தையை 2வதாக திருமணம் செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!… post thumbnail image
மும்பை:-கரீஷ்மா கபூர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கரீனாகபூரின் சகோதரி ஆவார்.கரீஷ்மாவுக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003ல் திருமணம் நடந்தது. பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துள்ளார்கள். கரீஷ்மாவுக்கு 39 வயதாகிறது.கரீஷ்மா அடுத்து சந்தீப் தோஷ்னிவால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். சந்தீப்பும் விவாகரத்து ஆனவர்தான். பிரபல மருந்து கம்பெனியில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கரீஷ்மாவும் சந்தீப்பும் விருந்து நிகழ்ச்சி யொன்றில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பானார்கள். நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி