செய்திகள்,திரையுலகம் மீடியாக்களைக் கண்டு மிரளும் இயக்குனர் லிங்குசாமி!…

மீடியாக்களைக் கண்டு மிரளும் இயக்குனர் லிங்குசாமி!…

மீடியாக்களைக் கண்டு மிரளும் இயக்குனர் லிங்குசாமி!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் லிங்குசாமி இப்போதெல்லாம் மீடியாக்களை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற மஞ்சப்பை பிரஸ்மீட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்த லிங்குசாமி, மீடியாக்களின் கண்ணில் படாமல் காரிலேயே உட்கார்ந்திருந்தார்.

விழா தொடங்கிகும்போது காரிலிருந்து இறங்கி வந்தவர் விறுவிறுவென மேடையில் ஏறிவிட்டார். விழா முடிந்ததும் மீடியாக்களை சந்திக்க விரும்பாமல் காரில் ஏறி பறந்துவிட்டார்.என்ன காரணமாம்தமிழ் இனத்துக்கு எதிரான இனம் படத்தை வாங்கி வெளியிட அவர் முயற்சி செய்தபோது, மீடியாக்கள் அவரது செயலை கண்டித்ததோடு, இனம் படத்தை வெளியிட முடியாத அளவுக்கு சிக்கலையும் உண்டாக்கின. அந்தக் கடுப்பு இன்னும் அவருக்கு குறையலையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி