அதனால், தனது படத்தை அஞ்சலி முடித்து தர வேண்டும் என்று அழைப்பு விடுத்த களஞ்சியம், தயாரிப்பாளர் சங்கம் உள்பட அனைத்து சினிமா சங்கங்களிலும் அவர் மீது புகார் அளித்தார்.எந்த பேச்சுவார்த்தைக்கும் அஞ்சலி உடன்படவில்லை.
அதோடு, தன் படத்தில் சொன்னபடி நடித்து தராத அஞ்சலிக்கு யாரும் ஆதரவு கொடுக்காதீகள் என்று அவருக்கு சான்ஸ் கொடுத்த ஆந்திர படாதிபதிகளையும் கேட்டுக்கொண்டார் களஞ்சியம். ஆனால் அஞசலியைப்போலவே அதை மற்றவர்களும் அலட்சியம் செய்து விட்டனர். இதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் அஞ்சலி.
அதனால் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது வரை இழுபறியில் நின்று கொண்டிருக்கிறது களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம். இந்நிலையில, சேட்டை படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த அஞ்சலி, தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து, ஏற்கனவே தான் அஞ்சலி மீது புகார் அளித்திருந்ததை நினைவுபடுத்தும் வகையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என்ற அனைத்து சங்கங்களுக்கும் மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளார் களஞ்சியம். அதோடு, ஏற்கனவே கமிட்டாகி பத்து நாட்கள் மட்டுமே நடித்துள்ள என் படத்தை அஞ்சலி முடித்து தந்த பிறகுதான் அவரை வேறு படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி