ஆனால் எந்திரன் படத்தில் எழுதிய இரும்பிலே ஒரு இருதயம், கோ படத்தில் எழுதிய என்னமோ ஏதோ போன்ற பாடல்களின் ஹிட்டுக்குப்பிறகு பேசப்படும் பாடலாசிரியர்களில் ஒருவராகி விட்டார். அதையடுத்து, அதிகமான படங்களுக்கு தற்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.அதோடு, எந்திரன், நண்பன்,இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய மதன்கார்க்கி, தற்போது சூர்யாவைக்கொண்டு வெங்கட்பிரபு இயக்கி வரும் படத்திற்கும் அவருடன் இணைந்து வசனம் எழுதுகிறார்.
இது அதிரடியான ஆக்சன் படம் என்றாலும், காதல், காமெடி என அனைத்து கமர்சியல் அம்சங்களும் நிறைந்த கதை என்பதால், இதுவரை தான் எழுதிய படங்களில் இருந்து மாறுபட்டு கலர்புல்லான கலகலப்பாக வசனங்களை தீட்டப்போகிறாராம் மதன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி