செய்திகள்,திரையுலகம் பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…

பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…

பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!… post thumbnail image
ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பொது இடத்தில் சக்தி கபூர் புகைப் பிடிக்கும் புகைப்படம் நேற்று பத்திரிகையில் வெளியானது.

இதனை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் நேம் சிங் பெருநகர தலைமை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கிரிஷ் குமார் ஓஜா, விசாரணையை 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதுதொடர்பாக விமான நிலைய நிர்வாகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமான நிலைய இயக்குனரையும் நிருபர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி