செய்திகள் உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை என்று கோபத்தில் சமையல் அறைக்கு சென்ற கவுதம் கத்தியை எடுத்து வந்து மஞ்சுவை குத்தி விட்டான். இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சு தற்கொலை செய்துவிட்டார் என்று நாடகம் ஆட அவரை இழுந்து வந்து முதல் மாடியில் இருந்து கிழே தள்ளிவிட்டுள்ளான்.

அப்போது இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அவனை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி