செய்திகள்,முதன்மை செய்திகள் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!… post thumbnail image
சென்னை:-சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம போன் வந்தது.7–வது மாடியில் பணியில் இருந்தவர் போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார்.ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி விட்டு அப்பெண் போனை துண்டித்து விட்டார்.

இதுபற்றி உடனடியாக போலீசுக்கும், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.மோப்ப நாய் உதவியுடன் ஆஸ்பத்திரி முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் வரை நடத்தப்பட்ட இச்சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதன் பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் பற்றி கேள்விப்பட்டதும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் உமாசங்கரும் அங்கு விரைந்து சென்றார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி