செய்திகள் பெண்களுக்கு பரிமாறிய உணவில் காண்டம்!…

பெண்களுக்கு பரிமாறிய உணவில் காண்டம்!…

பெண்களுக்கு பரிமாறிய உணவில் காண்டம்!… post thumbnail image
பீஜிங்:-சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர்.

அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு காண்டம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சாப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். உடனடியாக உணவை சப்ளை செய்தவரையும், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் யீ சி தெங் ஆகியோரை அழைத்து புகார் கூறினர்.ஓட்டல் நிர்வாகம் தங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று மூன்று பெண்களும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதற்கு ஓட்டல் நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் கேட்கும் தொகை அதிகம் என்று கூறியதோடு, அந்த மூன்று பெண்கள்தான் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த காண்டத்தை உணவில் கலந்துவிட்டு நாடகமாடுவதாக கூறினர்.இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி