செய்திகள்,திரையுலகம் மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…

மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!…

மலையாளத்தில் பிசியானார் நடிகை இஷா தல்வார்!… post thumbnail image
கேரளா:-மலையாளத்தில் வெளிவந்த ‘தட்டயன்மரத்து’ படத்தில் இஷா தல்வார் நடித்த பிறகு மலையாள ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார். பொதுவாக மலையாள ரசிகர்கள் நடிகைகளுக்கு அவ்வளவு முக்கியத்தும் தரமாட்டார்கள் அப்படி இருந்தும் இஷா அவர்களின் மனதை கவர்ந்தார்.

அதேபோல தமிழ் ரசிகர்களையும் கவரலாம் என்று எதிர்பார்த்த இஷாவை தில்லு முல்லு படத்திற்கு பிறகு ஆளை காணவில்லை. இத்தனைக்கு அந்தப் படம் ஹிட். ஆனாலும் தொடர்ந்து மலையாளத்தில் பிசியாக இருக்கிறார். உத்சகா கமிட்டி, பெங்களூர் டேஸ், காட் பிளஸ் பூ படங்களில் நடித்து வருகிறார்.

காட் பிளஸ் யூவில் கார்பரேட் கம்பெனிகளின் பேக்ரவுண்டில் நடக்கிற முக்கோண காதல் கதை. எனக்கு வலுவான கேரக்டர். ரசிச்சு பண்ணியிருக்கேன். தில்லு முல்லுக்கு பிறகு தமிழில் சில வாய்ப்புகள் வந்தது. அது எனக்கு திருப்தியாக இல்லை. சும்மா ஹீரோவை சுற்றி சுற்றி வருகிற கேரக்டர். நடிப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. அதனால் மலையாளத்தின் பக்கம் வந்துவிட்டேன். நல்ல கதை அமைந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்கிறார் இஷா தல்வார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி