செய்திகள்,திரையுலகம் தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…

தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!…

தமிழில் வெளியாகும் ‘டாவ்ன் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்’!… post thumbnail image
சென்னை:-2011ம் ஆண்டு வெளிவந்த ‘ரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்‘ படம் மனிதனின் வளர்ப்பு பிராணியாக இருக்கும் மனித குரங்குகள் அவனின் கொடுமை தாங்காமல் மனித குலத்தை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவைகளாக மாறிய கதை. 480 மில்லியன் டாலர்களை வசூல் செய்த படம்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘டாவ்ன் ஆப்தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்‘.முதல் பாக கதையில் இருந்து 10 வருடங்களுக்கு பிறகு நடப்பது மாதிரியான கதை. முதல் பாகத்தில் குரங்கு படைகளை திரட்டும் சீசர் என்னும் மனிதகுரங்கு இந்த பாகத்தில் குரங்கு படைக்கு தலைவனாகிறது. 2 ஆயிரம் மனித குரங்குகளை கொண்டு தனி சமுதாயத்தை அமைக்கிறது. அவற்றுக்கு எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்கிறது. குரங்கு சாம்ராஜ்யம் அமைந்தால் மனித இனம் அழிந்து விடும் என்று கருதும் மனித ராணுவம் அதனை எதிர்த்து போராடுகிற கதை.

குரங்குகள் அனைத்தும் அனிமேஷன்கள், மனித கேரக்டர்களாக ஆன்டி செர்கிஸ், கேரி ரூசல், கேரி ஓல்டுமேன், மேன் நடித்துள்ளனர். மேட் ரீவ்ஸ் இயக்கி உள்ளார். டுவண்டியன்த் சென்ஞ்சுரி பாக்ஸ் தயாரித்துள்ளது. இந்தியாவில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி