செய்திகள் வளர்ப்பு மகளுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!…

வளர்ப்பு மகளுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!…

வளர்ப்பு மகளுக்கு 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!… post thumbnail image
மும்பை:-மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி ஒருவர் 2008ம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் 38 வயதான ஒரு கட்டிட அறை வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

மாடல் அழகிக்கு முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒன்று இருந்தது அதையும் அவரே வளர்த்து வந்தார்.2010ம் ஆண்டு முதல் மாடல் அழகியின் 2 வது கணவர் தனது வளர்ப்பு மகளிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கி உள்ளார். சிறுமியை தொடுவதும். பாலியல் தொல்லை கொடுப்பதுமாக இருந்து உள்ளார். இது தொடர்பாக உனது தாயிடம் சொல்லகூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் நடந்த உண்மைகளை தனது தாயிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து மாடல் அழகி ஜூகு போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் சிறுமியை 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து 2வது கணவரை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி