செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் 2 நாட்களுக்கு பலத்த மழை!…

காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் 2 நாட்களுக்கு பலத்த மழை!…

காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் 2 நாட்களுக்கு பலத்த மழை!… post thumbnail image
சென்னை:-தென்மேற்கு வங்கக் கடலில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப் பெற்றுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–

நேற்று குமரி கடல் அருகே நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது.இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் 30 செ.மீ., மணிமுத்தாறு 27. செ.மீ., அம்பாசமுத்திரம் 23 செ.மீ., நாங்குநேரி 17.செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையோ, மிக கனமழைக்கோ வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு உள்மாவட்டங்களில் கன மழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும்.வருகிற வெள்ளிக் கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ரமணன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி