செய்திகள்,பொருளாதாரம் ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…

ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!…

ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனை!… post thumbnail image
சென்னை:-அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நாளான அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் நிறைய சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் அட்சய திரிதியை நாளில் ஒரு சிறிய நகையாவது வாங்க வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்த ஆண்டு அட்சய திரிதியை நேற்று மதியத்தில் இருந்து இன்று மதியம் வரை கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மதியத்தில் இருந்து நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.தியாகராயநகர், பிராட்வே, புரசைவாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், அடையார், தாம்பரம், பல்லாவரம் உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் நகைக்கடைகளிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதில் கம்மல், மோதிரம், வளையல் சிறிய செயின் ஆகியவை அதிகம் விற்பனையாகியது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 500 கிலோ தங்கம் விற்பனையானதாக நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.அட்சய திரிதியை நேரம் இன்று மதியம் வரை இருப்பதால் இன்று காலையிலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதனால் வழக்கத்தை விட 2 மணி நேரம் முன் கூட்டியே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. வெயிலையும் பொருட்படுத்தாமல் நகைக்கடைக்கு வந்து மகிழ்ச்சியுடன் மக்கள் நகை வாங்கிச் சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி