செய்திகள்,விளையாட்டு 2015 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு என சங்ககரா அறிவிப்பு!…

2015 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு என சங்ககரா அறிவிப்பு!…

2015 உலக கோப்பைக்கு பிறகு  ஓய்வு என சங்ககரா அறிவிப்பு!… post thumbnail image
லண்டன்:-இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சங்ககரா. இலங்கை அணிக்கு 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த பிறகு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.இதற்கிடையே ஒருநாள் போட்டியில் இருந்து சங்ககரா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். 2015–ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு முழுக்கு போடுகிறார். இதுகுறித்து சங்ககரா கூறியதாவது,

2015 உலக கோப்பை போட்டி எனது கடைசி ஒருநாள் போட்டியாகும். டெஸ்ட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.இந்த ஆண்டு இறுதியில் 37 வயதை நெருங்குவேன். தேர்வு குழுவினருடன் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பேன். இலங்கை அணிக்காக விளையாடுவதை பெருமைப்படுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தெண்டுல்கர், பாண்டிங், ஜெயசூர்யா ஆகியோருக்கு அடுத்தப்படியாக 4வது இடத்தில் சங்ககரா உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி