செய்திகள்,திரையுலகம் பட விழாவிற்கு வராத நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!…

பட விழாவிற்கு வராத நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!…

பட விழாவிற்கு வராத நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல்!… post thumbnail image
ஐதராபாத்:-இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி’ படமே தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழிலும் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் வர இருக்கிறது. ‘அனாமிகா’ தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் தவறாது பங்கேற்கும்படி நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அழைப்பு விடுத்து இருந்தனர்.ஆனால் விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்துவிட்டார். தயாரிப்பாளருக்கு இது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியில் வித்யாபாலன் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரே ‘கஹானி’ பட விழாக்களில் பங்கேற்று படத்தை விளம்பரம்படுத்தி உள்ளார். ஆனால் நயன்தாரா வராமல் தவிர்த்தது தவறு என பட அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வைபவ் மற்றும் இதர தெலுங்கு, நடிகர், நடிகைகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்று பேசினர். நயன்தாரா வராததால் டைரக்டரும் அதிருப்தியில் இருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி