செய்திகள் செத்த எலியை கொண்டு வரும் மாணவர்களுக்கு இலவச பீர்!…

செத்த எலியை கொண்டு வரும் மாணவர்களுக்கு இலவச பீர்!…

செத்த எலியை கொண்டு வரும் மாணவர்களுக்கு இலவச பீர்!… post thumbnail image
வெலிங்டன்:-நியூசிலாந்து நாட்டில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது.அவை பல்லிகளை கொன்று தின்று அழிகின்றன. மரங்களில் ஏறி பறவைகளின் முட்டைகளை உடைத்து குடிக்கின்றன. அதனால் அபூர்வ பறவைகளின் இனப்பெருக்கத்தால் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது செத்த எலிகளை கொண்டு வரும் மாணவர்களுக்கு அதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் இலவசமாக ‘பீர்’ வழங்கப்படுகிறது.இதற்கான உத்தரவை வெல்லிங்டன் பல்கலைக் கழகத்தின் அறிவியல் சொசைட்டிதுறை பிறப்பித்துள்ளது.

எலிகளை பிடிப்பதற்காக மாணவர்கள் அனைவருக்கும் எலிபொறி வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் தாங்கள் பிடித்த எலியுடன் வந்தால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரில் இலவசமாக பீர் குடிக்கலாம்.வீடுகளில் பொறிகள் வைக்க முடியவில்லை. எனவேதான் இப்பணியில் மாணவர்களை ஈடுபடுத்த நூதனமுறை கடைபிடிக்கப்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி