அரசியல்,செய்திகள்,திரையுலகம் நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…

நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!…

நள்ளிரவில் பிரசாரம் செய்த நடிகை மீது வழக்கு!… post thumbnail image
மீரட்:-உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளம் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா நள்ளிரவில் ரகசியமாக பிரசாரம் கூட்டம் நடத்தினார்.

பாராளுமன்ற தேர்தலில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தேர்தல் விதியை மீறி கூட்டம் நடந்ததால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கலாட்டா மோதல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற போது தான் அங்கு ரகசியமாக பிரசார கூட்டம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி