செய்திகள்,திரையுலகம் குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறிய நடிகை!…

குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறிய நடிகை!…

குழந்தையாக இருக்கும் போதே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறிய நடிகை!… post thumbnail image
மும்பை:-சந்திரமுகி (கன்னடம்) ஏக் ஜவானி ஹை திவானி உள்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோய்ச்சலின் இந்தி நடிகையான இவரது பெற்றோர்கள் பிரஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள். இவர் சிறுவயதில் ஊட்டியில் படித்தார்.பின்னர் லண்டன் பல்கலைகழகத்தில் பட்டம் படித்தார்.

சந்திரமுகி(கன்னடம்) படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.இவர் 2011 ஏப்ரல் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார்.செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் தான் சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறி உள்ளார்.அந்த பேட்டியில் அவர் கூறி உள்ளதாவது:-

குழந்தை பாலியல் கொடுமை என்ற தலைப்பில் தனது சொந்த அனுபவங்கள் குறித்து கூறும் போது நீங்கள் இது குறித்து கேட்கிறீர்கள் நான் அதைபற்றி பேச விரும்பவில்லை.என்னை பொருத்தவரையில் அது ஒருநாள் தலைப்பு அல்ல. உண்மை என்று ஒன்று இருக்கிறது.நான் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.இது போன்ற பிரச்சினைகளை பகிரங்கமாக பேசினால் மிகவும் ஆபத்து.இதுவே அதிர்ச்சி தரக்கூடிய தலைப்பாக மாறிவிடும். பிறகு நீங்கள் குறிப்பிடும் குழந்தை பாலியல் கொடுமை என்ற தலைப்பு பலனளிக்காமல் போய்விடும்.ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உண்மை என்ற ஒன்று இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி