அரசியல்,செய்திகள் ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…

ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…

ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!… post thumbnail image
போபால்:-ஆம் ஆத்மியின் குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வாகா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 3 தலைவர்கள் என்னை கற்பழித்துவிட்டனர் என்று 30 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குவாலியரை சேர்ந்த அந்த பெண் காம்போ போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

புகார் கொடுத்த பெண், குஷ்வாகா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின், குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வா, குவாலியர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹிமான்சு, மாவட்ட செயலாளர் அபிஜித் வாக் மற்றும் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மனுராஜ் ஆகியோர் என்னை மூன்று முறை கற்பழித்து விட்டனர் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் டிசம்பர் 2012- மார்ச் 2103 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்தது என்று அந்த பெண் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், டெல்லியில் கட்சியின் தலைவர்களை சந்தித்து புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் குஷ்வாகா பெண்ணின் இந்த கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனது புகழை கெடுக்கும் எண்ணத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்று குஷ்வாகா கூறியுள்ளார். ஆம் ஆத்மியின் தொண்டர்கள் சிலர் போலீஸ் நிலையம் முன் வந்து ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி