செய்திகள் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…

10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…

10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்  பிடிபட்டார்!… post thumbnail image
சிவகங்கை:-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. பறக்கும் படையினர் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர்.சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற பறக்கும் படையினர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களை பரிசோதித்தனர்.

அப்போது அலக்சாண்டர் என்னும் மாணவனை பறக்கும் படையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக வாலிபர் அலெக்சாண்டரை பறக்கும் படையினர் அவருடைய தேர்வுதாள் மற்றும் வினாத்தாள் பறிமுதல் செய்தனர்.ஆள் மாறாட்டம் செய்த மாணவனை பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிவகங்கை தனியார் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி