லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள 52 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் தங்களது கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
சிலர் பெண்கள் ஜீன்ஸ் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஆசிரியர் ஒருவர் கூறியதாவது;கிராமாத்து தலைவர்கள் எடுத்துள்ள முடிவு அர்த்தமற்றது பெண்களின் உரிமையை பறிப்பது சரியல்ல என்று கூறினார்.இந்த கூட்டத்தில் பெரும்பாலும் யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி