இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
என்ஜின் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 18 நாட்களாகியும் அதன் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி