செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…

கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…

கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!… post thumbnail image
கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தின்ஷா இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையில் வாடிய இவர், தனது கடைசி நாட்களில் கராச்சி பார்ஸி இன்ஸ்டிட்யூட் வாசலிலும், டிராபிக் சிக்னலிலும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தான் வாரியம் முன்னாள் வீரர்களின் நலனை புறக்கணித்து வருவதாகவும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி