அரசியல்,செய்திகள்,திரையுலகம் ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…

ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…

ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடகாவில் ஷிமோகா மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் எடியூரப்பாவை ஆதரித்து நடிகை ஸ்ருதி நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, ஷிமோகா நகரில் நடைபெற்ற பாஜ மகளிர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நமது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது பகைவர்கள் மூலமாக இல்லை. நல்லவர்களின் செயலற்ற தன்மையால்தான். ஆகவே, தேசத்தின் எதிர்கால நலனை முன்னிட்டு நாம் அனைவரும் வாக்களிப்பில் பங்கு கொள்ள வேண்டும்.நமது நாட்டின் மேம்பாட்டிற்காக நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வது அவசியம். இதற்காக பாஜ மகளிர் அணி பாடுபட வேண்டும். இந்த மக்களவை தேர்தல், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் யுத்தம். இந்த மகாயுத்தத்தில் மகளிரின் வாக்கு என்னும் புனித சக்தியை பயன்படுத்தி, தர்மத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை பற்றி செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கு தெரிய வாய்ப்பில்லை. அதே நேரம், சாலைகளில் சுற்றி திரிந்து டீ விற்ற நரேந்திர மோடிக்கு, ஏழை மக்களின் துயர வாழ்க்கை நன்றாக தெரியும்.ஆகவே, மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் நமது நாடு வளம் பெறுவது உறுதி. கட்சி, தனி மனித பண்பு மற்றும் பிரதமராவதற்கு தகுதியானவர் யார் என்பதை சீர்தூக்கி பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி