செய்திகள்,திரையுலகம் ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. இந்த திரைபடம் ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர இருக்கிறது.

அஞ்சான் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.சூர்யா ஏற்கனவே இரண்டு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.பேரழகன்,வேல்,வாரணம் ஆயிரம்,ஏழாம் அறிவு,மாற்றான் ஆகிய படங்களில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டானது.இந்த அனைத்து படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் சூர்யா நடித்துள்ள அஞ்சான் படமும் இரட்டை வேடம் என்பதால் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அஞ்சான் படம் லிங்குசாமி இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்,இசை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அஞ்சான் படம் ஆகஸ்ட் 15ல் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி