செய்திகள்,திரையுலகம் போதைபொருளுடன் நடிகர் கைது!…

போதைபொருளுடன் நடிகர் கைது!…

போதைபொருளுடன் நடிகர் கைது!… post thumbnail image
ஐதராபாத்:-‘பரேரே’, ரக்சகுலு, யுவராஜ்யம், ‘பேஸ்புக்’ உள்பட பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நந்தூரி உதய்கிரண். போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக நடிகர் நந்தூரி உதய்கிரண் ஆந்திர போலீசார் கைது செய்தனர்.அவருக்கு போதை பொருளை சப்ளை செய்த நைஜீரிய இளைஞனும் பிடிபட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் ‘கோகைன்’ போதை பொருள் வாங்கும் போது போலீசாரிடம் மாட்டினார்கள். எனபது குறிப்பிடதக்கது.ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் போலீசார் ரோந்து சுற்ரி வந்தனர். அப்போது நைஜீரியா இளைஞனிடம் நடிகர் நந்தூரி உதய்கிரண் ‘கோகைன்’ போதை பொருளை வாங்கிக் கொண்டு இருந்தார். அவர் களை போலீசார் கைது செய்தார்கள்.

கைதான நைஜீரிய வாலிபர் பெயர் ரோடிமி ஒலுசோலா வயது 29. இவர் டெல்லியில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்த ஐதராபாத் நகரில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இருவரிடம் இருந்து 15 கிராம் போதை பொருள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் கைபற்றினார்கள். ஹக்கீம் என்ற பிரபல போதை பொருள் கடத்தல்காரனிடம் இருந்து நைஜீரிய இளைஞன் வாங்கி ஐதராபாத்தில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி