கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய் விட்டதாக நிருபர்களிடம் கூறிய கெஜ்ரிவால், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.வாரணாசி நகரின் பிரபல கோயில் வழியாக கார் சென்றபோது, உள்ளே அமர்ந்திருந்த கெஜ்ரிவால் மீது சிலர் முட்டைகளை வீசினர். இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ‘இன்று என் மீது வீசப்பட்ட முட்டை, மோடியின் பண்ணையில் வளர்க்கப்பட்ட அம்பானியின் கோழி இட்ட முட்டை’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கெஜ்ரிவாலின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலில் வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளை பிற்பகல் ஒரு மணியளவில் போலீசார் அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி