செய்திகள் மதுரையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!…

மதுரையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!…

மதுரையில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!… post thumbnail image
மதுரை:-விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் வனஜா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).இதே ஊரைச் சேர்ந்த ஐடி மாணவர் ரவிசங்கர் என்பவர், மாணவியை ஏமாற்றி அவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

அவரது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த பெற்றோர், மகளிடம் கேட்ட போது ரவிசங்கரின் தொடர்பு குறித்து கூறினார்.இதனையடுத்து வனஜாவின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிசங்கரை கைது செய்தனர். பின்னர், ரவிசங்கர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த வனஜாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி எடுத்தது. அவரை பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இன்று அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது. 13 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்த தகவலால் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி