சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘மான் கராத்தே’. இந்தப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவிற்கு சிறப்பிவிருந்தினராக வந்திருந்த ஷங்கர், “இந்த விழாவிற்கு நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன். அவரின் இசையில் வெளிவந்த எல்லா பாடல்களும் என்னைக் கவர்ந்துவிட்டது.தனக்கு தெரியாத இசை சம்மந்தப்பட்ட புதிய விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் நான் பார்த்த ஆர்வம் அனிருத்திடமும் உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் படங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிற திருப்தி அவர் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் ஏற்படுகிறது.சிவகார்த்திகேயன் வளர்ச்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அவரும் முன்னணி நடிகராகிவிடுவார்” என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி