செய்திகள் உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…

உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…

உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!… post thumbnail image
டேராடூன்:-லட்சுமணன் ஜூலாவைச் சேர்ந்த மராத்தா (வயது 30), ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்குச் சென்று மனைவி பிரபாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது பிரபா, உருளைக்கிழங்கு உணவை தயார் செய்து கொடுத்தார்.

தக்காளி ஏன் சேர்க்கவில்லை? என்று கடும் ஆத்திரத்துடன் கேட்ட மராத்தா, திடீரென மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து, தலையை சுவற்றில் பலமுறை மோதியுள்ளார்.

இதனால் மண்டை உடைந்த பிரபா சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் மராத்தா தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக ரிஷிகேஷ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மராத்தாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி